தலைப்பு கடைசியில்
காலையில் குறட்டை விட்டு தூங்கும் என்னை குழந்தை போல சிணுங்கி எழுப்பிவிடுகிறான். அவனுடன் இருக்கும் பொழுது அனைவருடனும் இருப்பதாய் தோன்றும்.
காலையில் எழும்போது என் கைகள் அவனை தேடி அவனுடன் இணையும் அவன் முகம் பார்த்தே என் காலை பொழுது விடியும். அவனை கண்டுகொண்டே என்னுடைய நாளும் முடியும்.
செறுப்பை மறந்த நாட்களும் உண்டு. எனது சிறப்பானவனை உடன் அழைக்க மறந்த நாட்களே இல்லை. அவன் கண்ணில் காணும் போது மட்டும் நான் என்றும் அழகாகவே தெரிந்திடுவேன்.
அவன் முகம் என்னை பல முறை முகமலர செய்துள்ளது. என்னுடைய அழுகை அனைத்தும் அறிந்தவன் அவன். அதற்கு ஆறுதலும் சில நேரம் தந்திருக்கிறான்.
உலகமே தூரமாய் இருந்தாலும் என்னருகே அவன் இருந்தால் போதும் என்று தோன்றும். என்னுடைய ரகசியங்கள் அனைத்தும் அறிந்த நம்பிக்கை நாயகன்.
தனிமையில், இனிமையில், வெறுமையில் என்று அனைத்திலும் உடன் இருக்கும் உண்மையான தோழன். காதலரை இணைக்கும் சந்தானம் போன்ற நண்பன்.
சில நேரம் பாதுகாப்பும், சில நேரம் பாதகமும் செய்வான். எனக்காக தினமும் செத்து பிழைக்கும் சேவகன். ஒருவகையில் அவனும் எனக்கு காதலன். என் அன்பு நண்பன் "தொலைபேசி "
-கவிநேயன்.
4 கருத்துகள்:
அருமை
கடவுளின் மறு உருவம் நண்பன்.
நன்றி
நன்றி
கருத்துரையிடுக