சனி, 15 ஆகஸ்ட், 2020

Back to School

      பள்ளி செல்ல மனம் ஏங்குதே... 



கூலி தொழில் செய்பவர் முதல் Google இன் முதலாளி வரை அனைவர்க்கும் இருக்கும் பொதுவான ஆசைகளில் ஒன்று நான்  மீண்டும் அந்த பள்ளி வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே 
அப்படிப்பட்ட ஏக்கத்தின் வெளிப்பாடே இந்த தொகுப்பு 




நமக்கு சிறிதேனும் அடிபட்டாலும் கலங்கிப்போகும் அம்மா திங்கள்கிழமை காலையில் வயிற்றுவலி என்றதும் பொய் என்று கண்டுபிடித்து கண்டித்து அனுப்பும் அதிசயம் நிகழ்ந்த நாட்கள் அது.


நாம் எழுதாத வீட்டுப்பாடத்தை நண்பன் எழுதிவிட்டான் என்றதும் வரும் கோபத்தை அடக்க ஆயிரம் அன்னை தெரசா வந்தாலும் முடியாது 



ஒருவனின் கை மரபலகையில் தாளம் போட மற்றொருவன் கைகள் தட்ட மேசை மீது ஏறி ஆட்டம் போட்டதும் பின்பு ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு முட்டி போட்டதும் மறக்க முடியாதவை 


தாய்க்காக கூட மருத்துவமனை செல்லாத நாம் நண்பனுக்கு பட்ட அடிக்காக நாமும் மருத்துவமனை சென்று வகுப்பை கட்டடிக்க போட்ட திட்டங்கள் ராணுவ தளவாடங்களில் கூட பதிவில் இல்லாத மிக சிறந்த திட்டமாகும் 





மாலைநேர மரத்தடி  வகுப்பறைகள் தரும் சுகத்தையும் நிம்மதியையும் இப்போதெல்லாம் நாம் செல்லும் Park, Beach போன்றவை கூட தருவதில்லை 


பள்ளி முடிந்ததும் எடுக்கும் ஓட்டம்.. "இன்னைக்கு வரைக்கும் போலீஸ் ட்ரைனிங்ல் கூட யாரும் ஓடுனதுள்ளடா, அப்படி ஒரு ஓட்டம்" எனும் வடிவேலு நகைச்சுவையை நியாபகப்படுத்துகிறது.



காலை எழுந்ததும் புறப்பட தயங்கிய  மனம், நண்பனுக்கு காத்திருந்து பூத்திருந்த விழிகள், பள்ளி வாசல் கண்டதும் வேகமென நடை எடுக்கும் கால்கள், பார்த்து எழுதி மாட்டிக்கொண்டு அடிவாங்கி பழுத்துப்போன முதுகு, உடம்பு சரியில்லை என்பதை காட்ட நாம் செய்யும் முகபாவம்,  கடைசி மணி ஓசை கேட்க காத்திருக்கும் காதுகள் என எல்லாம் பள்ளியின் இனிமையான நாட்களின்  நியாபகம் சொல்கிறது 


மேலும் 1 ரூபாய் தின்பண்டம் வாங்கி ஊர்க்கே பங்கு வைக்கும் நண்பன், ஓயாமல் என்னிடம் வம்பு வைக்கும் இன்னொரு எதிரி எனும் நண்பன், எதற்காக செய்கிறோம் என்று தெரியாமல் செய்யும் காலை நேர பிராத்தனை கூட்டம், அங்கே நடக்கும் சிறு சிறு குறும்புகள்


நம்மை மட்டுமே முறைப்பது போல தோன்றும் தலைமை ஆசிரியரின் முகம், தமிழ் வகுப்பு நேர தூக்கம், ஆங்கில வகுப்பில் வரும் வேற்றுகிரக  வாசியின் எண்ணம், கணித வாத்தியார் மீது வரும் பயம், அறிவியல் என்றாலே பயம், சமூகம் அறியா  வயதில் படித்த சமூக அறிவியல், போலீஸ்க்கும் மேல பயம் தந்த P.E.T வாத்தியாரின் பாவனை என நீள்கிறது நினைவின் பட்டியல்...





வளர்ந்த பின் வாழ்க்கை தரும் ஏக்கம், சமூகத்தின் அடி தரும் வலி இவ்வளவு  கஷ்டமாக இருக்கும் என்று முன்பே அறிந்திருந்தால் மணியடித்த பின்பும் நாங்கள் பள்ளி எனும் சொர்க்கமே உன்னை விட்டு பிரிந்திருக்க மாட்டோம்.






                                                                                                    -கவிநேயன் 















  

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

Unknown சொன்னது…

அழகிய நினைவுகள்.

Kavineyan சொன்னது…

நன்றி

Kavineyan சொன்னது…

நன்றி

Unknown சொன்னது…

❤️sema vera level......malarum ninaivugal.....🔥

I'm Also Baby

             நானும் ஓர் குழந்தை   கற்பனையில் மட்டும் கிடைத்த காதல் எனும் உணர்வை பெற கட்டியவள் என்றொருத்தி வந்தாள். கட்டிலறை இன்பம்  கண்டு கா...